Advertisment

தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்; என்ன காரணம்?

தருமபுரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பொருள் குறைபாடுகளுக்காக ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
NEET, Medical Admission

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள், மருத்துவப் பொருட்கள் குறைபாடுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu | தர்மபுரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் மருத்துவப் பொருள் குறைபாடுகளுக்காக தேசிய மருத்துவ ஆணையம் ₹3 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.

மதுரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி உட்பட பல கல்லூரிகளுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப் பதிவில் குறைபாடுகள் இருப்பதாகக் காரணம் காட்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள பல கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை என்எம்சியின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரிய அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஜே.சங்குமணி கூறுகையில், “வருகை 75% க்கும் குறைவாக இருந்தால் நாங்கள் நோட்டீஸ்களை பெறுகிறோம்.

ஆனால் வளாகத்தில் ஆசிரியர்கள் இல்லாததற்கான சில நியாயமான காரணங்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று நாங்கள் ஏற்கனவே வாரியத்திடம் கூறியுள்ளோம்" என்றார்.

மேலும், “NMC ஆய்வுகள் அல்லது தேர்வுப் பணிகளுக்குச் சென்ற ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவில் கையெழுத்திடாமல் இருக்கலாம்.

இதேபோல், 24 மணி நேரப் பணியில் இருக்கும் ஆசிரியர்களும், மருத்துவ அல்லது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்களும் வருகைப் பதிவில் கையெழுத்திட மாட்டார்கள். இவற்றை குறைபாடுகளாக கருத முடியாது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment