Advertisment

கோவிலில் தரமற்ற பிரசாதம்: உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கோவிலில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவிலில் தரமற்ற பிரசாதங்களை  விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட  ஒப்பந்தத்தை  ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

Advertisment

சென்னை திருவெற்றியூரில்  உள்ள தியாகராஜ  சுவாமி கோவிலில், தரம் குறைந்த  கெட்டுப்போன  பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த புகாரையடுத்து பிரசாதம் விற்பனை செய்ய சீனிவாசன் என்பவருக்கு  வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கடந்த மார்ச் மாதம் அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அறநிலையத்துறை உத்தரவை  எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை  என தெரியவந்ததை  அடுத்தே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதில் தலையிட வேண்டியதில்லை  என நீதிபதி  தெரிவித்து, ஒப்பந்ததாரருக்கு அதில் தலையிட வேண்டியதில்லை  என நீதிபதி தெரிவித்து, ஒப்பந்ததாருக்கு வழங்கப்பட்ட  ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என்று தீர்பாளித்திள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment