வெங்கடேஷ் பட், ஸ்டையிலில் இப்படி திருநெல்வேலி சொதி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
கேரட் 4
பீன்ஸ் 8
2 உருளைக்கிழங்கு
அரை கப் பச்சை பட்டாணி
2 டேபிள் ஸ்பூன் பாசி பருப்பு
தேங்காய் முதல் பால் 250 எம்.எல்
தேங்காய் இரண்டாம் பால் 500 எம்.எல்
1 ½ இஞ்ச் இஞ்சி
4 பச்சை மிளகாய்
தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்
1 கொத்து கருவேப்பிலை
10 சின்ன வெங்காயம்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
தேவையான அளவு உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து கிளரவும். நிறம் மாறியதும், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். இஞ்சி- பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, அதை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து பாதி அவித்த காய்கறிகளை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இரண்டாம் பாலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வேக வைக்கவும். ஒரு கொதி வர வேண்டும். தொடர்ந்து வேக வைத்த பாசி பருப்பை சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து முதல் தேங்காய் பாலை சேர்த்து கிளரவும். கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.