Advertisment

கணிதத்தில் நூற்றுக்கு நுறு... மருத்துவம் படிக்க விருப்பம் : உதவி கேட்கும் கோவை சுமை தூக்கும் தொழிலாளி மகள்

கோவையில் சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் பிளஸ் 2 கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
srila Coimbator

தாயுடன் ஸ்ரீ ராஜலட்சுமி - தந்தையுடன் செளபாக்கியா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன்- முருகேஸ்வரி தம்பதியினர். பால்பாண்டியன் சுமை வண்டி இழுக்கும் பணி செய்து வருகிறார். முருகேஸ்வரி லோடு வண்டி ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஸ்ரீ ராஜலட்சுமி, ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல்+ கணிதவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் நடைபெற்று முடிந்த பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், ஸ்ரீ ராஜலட்சுமி கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதோடு 600 க்கு 560 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி கூறுகையில், தான் படிக்க உதவிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. மருத்துவராக வேண்டுமென்பது எனது கனவு. அதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளேன்.

அதே சமயம் எங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அதே போல் அப்பள்ளியில் அக்கவுண்ட்ஸ் (Accounts) பாட பிரிவில் படித்த மாணவி செளபாக்கியா 595 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சிவில் சர்விஸ் மேற்கொள்ள இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment